search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை சட்டசபை"

    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார்.
    • பொதுமக்கள், சட்டசபை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு டெண்டர் விடப்படுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    சில நேரங்களில் முதலமைச்சர், எம்.எல்.ஏ.கள் வருவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் கிராமத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அப்போது அவர்களுக்கு அப்பகுதியில் மதிய உணவு கிடைக்காததால் உணவின்றி அங்கேயே காத்திருக்கின்றனர். மேலும் சிலர் சிறிது தூரம் சென்று ஓட்டல்களில் அதிக பணம் கொடுத்து உணவு சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.

    இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் சட்டசபை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையேற்று முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார்.

    மேலும் இதனை அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி சாலையில் உள்ள சட்டசபையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் செலவில் புதிதாக உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இங்கு பொதுமக்கள், சட்டசபை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு டெண்டர் விடப்படுள்ளது. விரைவில் இப்பகுதியில் உணவகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
    • குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
    • அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்தினார்.

    பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுகிறது. இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்துவருகிறார்.

    தலைமைச்செயலாளருடன் இணைந்து அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம் இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

    வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.
    • பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பா.ஜனதாவுக்கு 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் பாஜகவின் அசோசியேட் எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பா.ஜனதா நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், மத்திய மந்திரி, மேலிட தலைவர்கள் வருகையின்போதும் இவர்கள் பங்கேற்கின்றனர்.

    இவர்களுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா தலைமை முதல்-அமைச்சர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமைந்து 15 மாதமாகியும் வாரிய பதவி நிரப்பப்படவில்லை. இதனால் ஏற்கனவே என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.

    பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர். சமீபத்தில் புதுவைக்கு வந்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து மேலிட பார்வையாளர் சுரானா, முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில் புதுவை சட்டசபையிலும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் வெடித்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை இல்லாமல் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை புறக்கணிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதா ஆதரவு தரும் ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.சீனிவாச அசோக்கும், என் தொகுதியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எம்.எல்.ஏ.வான எனக்கு தெரியாமல் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகின்றனர். பரிந்துரை இல்லாமல் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது என புகார் செய்தார்.

    இதே குற்றச்சாட்டை பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் சிவசங்கர் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் தெரிவித்தார். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தங்கள் தொகுதியிலும் இதே நிலை நீடிப்பதாக கூறினார். அவர் பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனையை கேட்டுத்தான் கோவில் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறை எதிர்கட்சி தொகுதிகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால் ஆளும்கட்சி தொகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கமிட்டி அமைக்கின்றனர். இதனால் ஆளும்கட்சியாக இருந்தாலும் எம்.எல்.ஏ.க்களான எங்கள் உரிமை பறிபோகிறது.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்பதற்காக எங்களை பழிவாங்குகிறீர்களா? நாங்களும் கையெழுத்திட்டுத்தான் முதல்-அமைச்சரை தேர்வு செய்துள்ளோம். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கடிதம் மூலம் ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. தொகுதிகளை முதல்-அமைச்சர் பழி வாங்குகிறாரா? இந்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்கட்சியாககூட நாங்கள் அமர்வோம் என்று கூறினார்.

    • புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது.
    • புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    கவர்னர் உரை மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறுமெனவும் அவர் கூறினார். புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கவர்னர் தமிழிசை தொடர்ந்து உரை நிகழ்த்தினார். நாளை மற்றும் நாளை மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    • முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது.
    • அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

    மறுநாள் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. கூட்டத்தொடர் குறைந்த பட்சம் 15 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.

    இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம்.

    2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அரங்கில் நாளை (புதன்கிழமை) தணிக்கை குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் தமிழிசை தலைமையில் 600 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நானும், பொதுக்கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேசும் பங்கேற்கிறோம்.

    இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும். ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறோம். 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.

    சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×